Tuesday, January 13, 2009

ஏங்கல்ஸ்

பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels), (நவம்பர் 28, 1820ஆகஸ்டு 5, 1895) 19ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஜேர்மன் அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிச கட்சி அறிக்கையை மார்க்ஸுடன் சேர்ந்து எழுதினார். கார்ல் மார்க்ஸின் இறப்புக்கு பின் மூலதனம் நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் கார்ல் மார்க்ஸ் ஆவார்.

உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை நாய் பிழைப்பு என்று அவரே குறிப்பிடும் வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்புக்கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் கெகலின் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார்.




மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார். அங்கிருந்து செர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849-இல் செர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார்.

தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தி அவர் வளர்வதற்காக தன்னையே கரைத்துகொண்டவர்தான் எங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.


எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவ ஞானி; எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகக் கட்டுப்பாடான ஒழுங்கு நிறைந்தவர். மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.

இனி மார்க்ஸையும் மின்சாரத்தையும் தவிர்க்க முடியாது.

கார்ல் மார்க்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கார்ல் மார்க்ஸ்
Western Philosophy
19ஆம் நூற்றாண்டு மெய்யியல்

கார்ல் மார்க்ஸ்
முழுப் பெயர் கார்ல் என்ரிச் மார்க்ஸ்
பிறப்பு மே 5, 1818
Trier, பிரசியா
இறப்பு மார்ச் 14 1883 (அகவை 64)
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
சிந்தனை மரபு(கள்) மாக்சிசம்
முக்கிய ஆர்வங்கள் அரசியல், பொருளியல், வர்க்க முரண்பாடு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Co-founder of மாக்சிசம் (with Engels), alienation and exploitation of the worker, The Communist Manifesto, Das Kapital, Materialist conception of history

கார்ல் மார்க்ஸ் (கார்ல் ஹென்ரிச் மார்க்ஸ், Karl Heinrich Marx, மே 5, 1818, ஜேர்மனிமார்ச் 14, 1883, லண்டன்) ஜேர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார்.

மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் நிபுணராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகவும் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.

பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளாரெனினும் இவரது ஆய்வுகளினதும், கருத்துக்களினதும் அடிப்படை, வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வுசெய்தல் என்பதாகும்.




கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதமொன்றிலிருந்து பெறப்பட்ட பின்வரும் பகுதி அன்னாரின் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளின் சாராம்சத்தை தருகிறது.

நவீன சமூகத்தில் வர்க்கங்களின் இருப்பையோ அவற்றுகிடையான முரண்பாட்டினையோ கண்டறிந்ததற்கான பெருமை எனக்குரியதல்ல. எனக்கு நீண்டகாலத்துக்கு முன்னரே வர்க்க முரண்பாட்டின் வரலாற்று வளர்ச்சியை பூர்ஷ்வா வரலாற்றறிஞர்களும், வர்க்கங்களின் பொருளியல் சட்டகத்தைப்பற்றி பூர்ஷ்வா பொருளியலாளர்க்ளும் விபரித்துவிட்டார்கள். நான் புதிதாக செய்ததெல்லாம், பின்வருவனவற்றை நிறுவியதுதான்

1. உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்று காலகட்டங்களில் மட்டுமே வர்க்கங்களின் இருப்பு கட்டுண்டிருக்கிறது.

2. வர்க்க முரண்பாடானது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும்.

3. இந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமானது வர்க்கங்களினதும் வர்க்க சமுதாயத்தினதும் அழிவிற்கான இடைமாறு நிலையை மட்டுமே அமைத்துக்கொடுக்கும்.

- மார்ச் 5, 1852 Weydemeyer க்கு எழுதப்பட்ட கடிதம்


கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆவார்.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] வாழ்க்கைக்குறிப்பு

இளம் வயதில் கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ், தற்போது ஜேர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே 5ம் திகதி பிறந்தார். அவர் 1824 இல் கிறிஸ்துவராக மதம் மாறிய ஒருயூதரான ஹைன்றிஷ் மார்க்ஸ் எனும் வசதி படைத்த வழக்கறிஞர் ஒருவரின் மூன்றாவது மகனாவார்.

பொன், பேர்லின் பல்கலைக்கழகங்களில் சட்டம், வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்றார். யெனா பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டத்தினை பெற்றார்.

1841 இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சிலகாலம் பத்திரிகைத்துறையில் இருந்தார். சிறிது காலத்திலேயே ஜனவரி 1, 1843இல் தடைக்குள்ளான றைனிஷ் ஸைற்றுங் எனும் எதிர்க்கட்சி செய்தி ஏட்டின் ஆசிரியராக இருந்தார்.

இக்காலப்பகுதியில் லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான் 21 வயதுடைய ஜெனியுடன் மார்க்ஸுக்கு காதலுறவு ஏற்பட்டது. இதன்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக்குடும்பத்தைச்சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக 8 ஆண்டுகள் தமது காதலை இரகசியமாக வைத்திருந்து ஜெனிக்கு 29 வயதாயிருந்தபோது அவரை மார்க்ஸ் திருமணம் செய்துகொண்டார்.

பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய நாடுகளிடையே ஒவ்வொன்றினதும் புரட்சிகர இயக்கங்களில் பங்குபற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடுகடத்தப்பட்ட மார்க்ஸ், 1843இற்கும் 1849 இற்கும் இடையே புலம் பெயர்ந்த வாழ்க்கையினை வாழ்ந்தார்.

1849 ஓகஸ்ட் 24 இல் பிரான்சில் உள்ள பிறிற்றனியில் சதுப்பானதும் உடல் நலத்துக்கு ஒவ்வாததுமான இடமொன்றுக்கு நாடுகடத்துமாறான பிரேஞ்சு அரசாங்கத்தின் ஆணைக்கு பணிய மறுத்து லண்டனுக்கு சென்று குடியேறி 35 ஆண்டுகளான தனது சீவியகாலத்தின் மிகுதியை அங்கேயே வாழ்ந்தார். அக்காலத்தில் இங்கிலாந்து ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் அகதிகட்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெருமெடுப்பில் கட்டப்பட்ட பிரமாண்டமான பிரித்தானிய மியூசியத்தின் நிர்மாண வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்ஸ் நாள் தவறாது அங்கு சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்கு செலவிட்டு வந்தார். அங்கேதான் மூலதனம் எனும் நூல் தோற்றம் பெற்றது.

மார்க்ஸ், ஏங்கல்சை 1844 ஓகஸ்ட் 28க்கும் செப்டெம்பர் 6க்கும் இடையே பாரிசில் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவரும் தம்மிடையே நட்புறவு கொள்ள ஆரம்பித்தனர்.

மார்க்சின் பெற்றோர் இறந்த சமயம் அவருக்கு மரபுரிமையாக சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சால் தோற்றுவிக்கப்பட்ட முதலாவது கம்யூனிஸ்ட் கழகத்தின் பதிநான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் இடமிருந்து ஆறு நூறு பவுண் அளவில் விருப்புரிமைக்கொடையை மரபுரிமையாக பெற்றார்.

1850களின் முதல் பாதியில் நாடுகடந்து லண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்க்ஸ் தீவிரமான வறுமைக்குள்ளானார். அக்காலத்தில் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்துகொண்டே வாழும் நிலை ஏற்பட்டது. தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடைமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்ஸ் தனது குடும்ப வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் மார்க்சுக்கு 350 பவுண் ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார். இதுவே மார்க்சினது முக்கியமான வருமானமாக இருந்தது. நியூயோர்க் டெய்லி டிரிபியூன் என்னும் முற்போக்கு பத்திரிகைக்கு ஆக்கங்கள் எழுதிவந்தபோதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அவ்வேட்டின் ஐரோப்பிய அரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண் பணம் வழங்கப்பட்டது . ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பிரசுரமாகவில்லை. 1862 வரை டிரிபியூனுக்கு எழுதி வந்தார். ஜெனியின் உறவினர் ஒருவர் இறந்தபோதும், ஜெனியின் தாய் இறந்தபோதும் ஜெனிக்கு மரபுரிமையாக ஓரளவு பணம் கிடைத்தது. இதனால் அவர்கள் இலண்டனின் புறநகர்ப் பகுதியான கெண்டிஷ் நகரில் இன்னொரு வீட்டுக்குக் குடிபெயரக்கூடியதாக இருந்தது. வருமானம் குறைவாக இருந்ததனால் மார்க்ஸ் பொதுவாக அடிப்படை வசதிகளுடனேயே வாழ்ந்துவந்தார். எனினும், தனது மனைவியினதும் பிள்ளைகளினதும் சமூகத் தகுதி காரணமாக ஓரளவு பூர்ஷ்வா ஆடம்பரங்களுக்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது.

மார்க்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு பிள்ளைகள் பிறந்தனர். எனினும் மூன்று பிள்ளைகள் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டன. மார்க்சுக்கும் ஜெனிக்கும் பிறந்த பிள்ளைகள், ஜெனி கரோலின் (1844–1883), ஜெனி லோரா (1845–1911), எட்கார் (1847–1855), ஹென்றி எட்வார்ட் கை (1849–1850), ஜெனி ஈவ்லின் பிரான்சிஸ் (1851–1852), ஜெனி ஜூலியா எலீனர் (1855–1898) என்போராவர். இவர்கள் தவிர ஒரு குழந்தை 1857 ஜூலையில் பெயரிடு முன்னரே இறந்துவிட்டது.

இலண்டன், ஹைகேட் மயானத்திலுள்ள கார்ல் மார்க்சின் கல்லறை

1881 ஆம் ஆண்டு டிசம்பரில் மார்க்சின் மனைவி ஜெனி காலமானார். இதன்பின் மார்க்ஸ் 15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரலுறை அழற்சி (pleurisy) போன்ற நோய்களாகி அவரது உயிரைப் பறித்தது. 1883 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி மார்க்ஸ் இலண்டனில் காலமானார். இறக்கும்போது நாடற்றவராக இருந்த மார்க்ஸ் இலண்டனிலுள்ள ஹைகேட் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" (Workers of All Land Unite)என்பதும், "மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே" என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

மார்க்சின் நெருங்கிய தோழர்கள் பலர் இவரது இறப்பின்போது கலந்துகொண்டு பேசினர். இவர்களுள் வில்ஹெல்ம் லீப்னெக்ட், பிரெடெரிக் ஏங்கெல்ஸ் என்பவர்களும் அடங்குவர். ஏங்கெல்ஸ் பேசும்போது,

"மார்ச் 14 ஆம் தேதி மூன்று மணிக்கு கால்மணிநேரம் இருந்தபோது வாழ்ந்துகொண்டிருந்த மிகப்பெரிய சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். இவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப்பட்டிருந்தார். திரும்பிவந்து பார்த்தபோது அவர் தனது நாற்காலியில் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டதைக் கண்டோம்." என்றார்.

மார்க்சின் கல்லறை 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சியால் அமைக்கப்பட்டது. இதில் லாரன்ஸ் பிராட்ஷாவினால் உருவாக்கப்பட்ட மார்க்சின் மார்பளவுச் சிலையும் உள்ளது. மார்க்சின் முன்னைய கல்லறை மிகவும் எளிமையானதாகவே இருந்தது. 1970 ஆம் ஆண்டில் இக் கல்லறையை கையால் செய்த வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி செய்யப்பட்டது ஆயினும் இது வெற்றியளிக்கவில்லை.

Georg Wilhelm Friedrich Hegel என்பவரின் தர்க்கமுறை மற்றும் வரலாற்று பார்வை அடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்காடோ என்பவர்களின் தொன்மை அரசியல் பொருளியல் கருத்துக்கள் பிரான்சு தத்துவவியலாளர் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் என்பனவற்றால் மார்க்ஸ் மிகவும் கவரப்பட்டார்.

[தொகு] மார்க்சின் சிந்தனைகள்

மார்க்சைப்போல மார்சியவாதிகளாலும், எதிர்ப்பாளர்களாலும் ஒன்றுபோலவே பிழையாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என அமெரிக்க மார்க்ஸ் பற்றி ஆய்வு செய்தவரான ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர்.

[தொகு] மார்க்ஸ் சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தியவை

மார்க்சினது சிந்தனைகளில் பல முந்திய, சமகாலச் சிந்தனைகளின் செல்வாக்கு உள்ளது. பின்வருவன அவற்றுள் சில.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்சின் வரலாறு பற்றிய நோக்கு ஹேகெலின் சிந்தனைகளின் தாக்கத்தைக் கொண்டது ஆகும். மனித வரலாறு துண்டுதுண்டாக இருந்து முழுமையையும் உண்மையையும் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது என ஹேகல் நம்பினார். இந்த உண்மைநிலை நோக்கிச் செல்லும் வழிமுறை படிமுறையானது என்றும் சில வேளைகளில் இருக்கும் நிலைக்கு எதிராக தொடர்ச்சியற்ற புரட்சிகரமான பாய்ச்சலும், எழுச்சிகளும் தேவை என்று ஹேகல் விளக்கியிருந்தார். எடுத்துக்காட்டாக, ஹேகல் ஐக்கிய அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த அடிமை முறையைத் தீவிரமாக எதிர்த்துவந்ததுடன், கிறிஸ்தவ நாடுகள் இதனை ஒழித்துவிடுவார்கள் என்றும் அவர் எதிர்வுகூறினார்.

[தொகு] மெய்யியல்

மார்க்சின் மெய்யியல் அவரது மனித இயல்பு பற்றிய நோக்கில் தங்கியுள்ளது. அடைப்படையில், மனிதனுடைய இயல்பு இயற்கையை மாற்றுவது என்று மார்க்ஸ் கருதினார் அவ்வாறு இயற்கையை மாற்றும் செயல்முறையை "உழைப்பு" என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வல்லமையை உழைப்புச் சக்தி என்றும் அவர் அழைத்தார். மார்க்சைப் பொறுத்தவரை இது ஒரே சமயத்தில் உடல் சார்ந்ததும் மனம் சார்ந்ததுமான செயற்பாடு ஆகும்.

ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக்கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையிலுள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்."
                                   - (மூலதனம், தொகுதி 1, அத்தியாயம் 7)

[தொகு] மார்க்ஸ்சின் ஆக்கங்கள்

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] ஆதாரங்கள்

  • வெ.சாமிநாத சர்மா. (). மார்க்ஸ். சென்னை: சந்தியா.

Sunday, January 11, 2009

அது நெருக்கடி நிலைக் காலம். எமர்ஜென்சி என்று சொல்லப்பட்ட நெருக்கடி நிலையை மத்திய அரசு பிறப்பித்து, அது அமலில் இருந்த 1976ஆம் ஆண்டு. எனது சொந்த வாழ்விலும் மிக மிக நெருக்கடியான காலம் அது. ஒரு நாள் மாலை நேரம். மதுரையில் ஒரு தெருவில் நானும், அம்பத்தூர் தோழர் மூர்த்தியும் பேசிக்கொண்டே நடந்து கொண்டு இருந்தோம்.காலையில் இருந்தே சாப்பிடவில்லை. சாப்பிட வழியில்லை! ஒரு நண்பரிடம் இரண்டு ரூபாய் பெற்றுக் கொண்டு, மலிவு விலை உணவு விடுதியை நோக்கிச் சென்று கொண்டு இருந்தோம்.

தெருமுனையில் தரையில் பழைய புத்தகங்கள் விற்பனைக்காகப் பரப்பி வைக்கப்பட்டு இருந்தன. அதை நான் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே நடந்து, கடந்துவிட்டேன். திடீரென்று மூளையில் மின்னலடித்தது! நீண்ட காலமாக நான் தேடி வந்த ஏதோ ஒரு புத்தகம் அங்கே இருப்பதைப் போன்ற உணர்வு! திரும்பி வந்து பார்வையால் துழாவினேன்! ஆ! கிடைத்துவிட்டது! தோழர் இ.எம்.எஸ். எழுதிய ‘மகாத்மாவும் அவரது கொள்கையும்’ என்ற அருமையான திறனாய்வுப் புத்தகம்தான் அது! 1959ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பதிப்பு!

கடைக்காரரிடம் விலை விசாரித்தேன். நீண்ட பேரத்துக்குப் பிறகு “ரெண்டு ரூபாய்க்குக் குறையாது” என்று கறாராகச் சொல்லிவிட்டார்! மூர்த்தியைப் பரிதாபமாகப் பார்த்தேன்! அவர் “பரவாயில்ல தோழர், வாங்கிக்குங்க. சமாளிக்கலாம்” என்று ஆறுதலாகச் சொன்னார்! உடனே புத்தகத்தை வாங்கிவிட்டேன்! அன்று முழுவதும் இருவரும் பட்டினி! இதுபோல, புத்தகம் தொடர்பாக வகை வகையான பல சம்பவங்கள் எனது வாழ்வில் உண்டு! அந்த அளவுக்குப் புத்தகங்கள் மீது எனக்குத் தீவிரக் காதல்! தீராக் காதல்!

நான் படித்த ஆயிரக்கணக்கான புத்தகங்களில் (என்ன ஒரு தன்னடக்கம் பாருங்கள்!) என்னை மிக மிகக் கவர்ந்த புத்தகங்கள் ஒரு நூறாவது இருக்கும்.அவற்றில் எனது சிந்தனையிலும் வாழ்க்கையிலும் ஒப்பீட்டளவில் அதிக விளைவை ஏற்படுத்தியுள்ள புத்தகங்கள் என்ற முறையிலும், வகைக்கு ஒன்று என்ற முறையிலும் பத்துப் புத்தகங்களைத் தேர்வு செய்ய விரும்பி, முடியாமல், பதினொரு புத்தகங்களைத்
தேர்வு செய்து இருக்கிறேன். அவை தொடர்பாக உங்களோடு உரையாட விரும்புகிறேன்.
முதலில் -

1. ‘பொது உடைமைதான் என்ன?’

நான் சிறுவனாக இருந்தபொழுது தீவிரமான கடவுள் பக்தனாக இருந்தேன். ஆனால் குடும்பத்திலும், பள்ளியிலும் வெளியிலும் நிலவிய சூழ்நிலைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தன. எனினும் பல சமாதானங்களைச் சொல்லிக்கொண்டு இருந்தேன். இந்தச் சூழ்நிலையில்தான் நான் பத்தாம் வகுப்பிலும், பதினொன்றாம் வகுப்பிலும் படித்தபொழுது த.ச.இராசாமணி ஐயா என்ற தமிழாசிரியர் எனக்கு வாய்த்தார். அவர் ஒரு கம்யூனிஸ்ட். பாடம் நடத்துவதிலும் வல்லவர். பாடம் தொடர்பாக நாங்கள் தொடங்கிய விவாதம், அரசியல், சமூகம், பொருளாதாரம்... என்று நாளும் வளர்ந்தது.

ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். ராகுல்ஜி என்ற ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘பொது உடைமைதான் என்ன?’ என்ற புத்தகம். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். மீண்டும் மீண்டும் படித்தேன். ஒரு சில சந்தேகங்கள். இராசாமணி ஐயாவிடம் மீண்டும் விவாதம். அவ்வளவுதான்! எனது மனதை விட்டுக் கடவுள் நம்பிக்கை மறைந்தது! கம்யூனிசம் நிறைந்தது! புதிய வாழ்க்கை தொடங்கியது! அந்த அளவுக்கு அருமையான புத்தகம் தான் ‘பொது உடைமைதான் என்ன?’

இன்றைய எனது வளர்ந்த நிலையில் இருந்து பார்க்கும்போது, இந்தப் புத்தக்கத்தில் சில குறைபாடுகள் உள்ளன என்பது தெரிகிறது. ஆனால் குறைகளே இல்லாத, எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு புத்தகம் என்று எதுவுமே இல்லை என்பதும், இருக்க முடியாது என்பதும் உங்களுக்குத் தெரிந்ததுதானே. எனவே ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்பொழுது இது ஒரு சிறந்த புத்தகம் என்றே இப்பொழுதும் நான் கருதுகிறேன். இனி இந்தப் புத்தகத்தைப் பற்றி:

இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் தலைசிறந்த மேதைகளில் ஒருவர் ராகுல சாங்கிருத்தியாயன் என்ற ராகுல்ஜி. இந்த மேதை, எளிய மக்களுக்காக 1935ஆம் ஆண்டில் எழுதிய எளிமையான, சிறிய புத்தகம்தான் ‘பொது உடைமைதான் என்ன?’ (‘கம்யூனிசம்’ என்ற சொல்லுக்குத் தமிழில் ‘பொது உடைமை’ என்ற சொல்லே பயன் படுத்தப்படுகிறது. ஆனால் கம்யூனிசம் என்பது ‘உடைமையை பொதுவாக ஆக்குவது’ மட்டுமல்ல, அதைவிட விரிந்த பொருள் கொண்டது. எனவே நான் தமிழிலும், கம்யூனிசம் என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறேன். இதுபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்).

இந்தப் புத்தகத்தில் எடுத்த எடுப்பிலேயே, முதல் பத்தியிலேயே, முதலாளித்துவம் என்றால் என்ன, அதன் சாராம்சம் என்ன? என்பதை அவர் அழகாகக் கூறிவிடுகிறார். அதாவது - “ஒரு மனிதன் வேறு எந்தத் தகுதியும் அற்றவனாயிருந்தும், கேவலம் தனது முதலின் பலத்தினால் பொருள்களை உற்பத்தி செய்யும் விலையுயர்ந்த சாதனங்களைப் பெற்று, அதன் மூலம் ஏராளமான மக்களுடைய உழைப்பின் பெரும் பகுதியைத் தனது சொந்த லாபத்திற்காகவும், தனக்கு உதவி செய்யும் முதலைப் பெருக்குதவற்காகவும் உபயோகித்துப் பணம் சம்பாதிப்பதற்குச் சிறந்த வழி முதலாளியக் கொள்கை” என்று அவர் அறிமுகப்படுத்துகிறார்.

இதைத் தொடர்ந்து, மனிதகுல வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி, ஐரோப்பா கண்டத்திலும், பிறகு இந்தியாவிலும் முதலாளித்துவம் தோன்றி வளர்ந்த கதையை ஒருசில பக்கங்களில் விவரிக்கிறார். அடுத்து, பொது உடைமைக் கொள்கை (கம்யூனிசம்) தோன்றுவதற்கான தேவை, சூழ்நிலை பற்றிக் கூறுகிறார். இதன் பிறகு சரமாரியாக வந்து விழுகின்றன அவருடைய வாதங்கள்.

பொதுஉடைமைச் சமுதாயத்தில் மட்டுமே வறுமை, ஜாதி, கடவுள் - மத நம்பிக்கை, பெண் அடிமைத்தனம் ஆகியவை முற்றாக, முழுமையாக ஒழியும் என்பதையும் “மனித வாழ்க்கை மிகுந்த அமைதியும், சுகமும், மகிழ்ச்சியும் உடையதாக” இருக்கும் என்பதையும் அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுகளுடனும், தர்க்க ரீதியான வாதங்களுடனும் கூறி முடிக்கிறார் ராகுல்ஜி.

இப்போது இந்தப் புத்தகத்தில் இருந்து சில மேற்கோள்கள்:

விஞ்ஞான வளர்ச்சி 6 மனிதர்களின் வேலையை ஒரு மனிதன் செய்ய உதவி செய்தால் பாக்கி 5 மனிதர்களை வேலையற்றவர்களாகச் செய்து, அவர்களைப் பசியால் மாளச் செய்யக்கூடாது. வேலையின் நேரத்தை அதே 6 மனிதர்களுக்கும் பிரித்துக் கொடுத்து விட வேண்டும். 6 மனிதர்கள் 12 மணி நேரத்தில் நெய்யக்கூடிய துணியை ஒரே மனிதன் இயந்திரத்தின் உதவியால் அதே நேரத்தில் நெய்துவிடக் கூடுமானால் அந்த 12 மணி நேர வேலையை அந்த 6 மனிதருக்கும் தலைக்கு 2 மணி நேரவிகிதம் பிரித்து கொடுத்து விட வேண்டும். இதுதான் பொதுவுடைமைக் கொள்கை, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு நம் முன்னால் பிரேரேபிக்கும் சிறந்த வழி.

ஜாதிய வேற்றுமை உணர்ச்சியை உறுதிப்படுத்த விரும்புகிறவர்கள், அதை உபயோகித்துப் பொருளாதார லாபம் பெற விரும்பும் சுயநலவாதிகளென்பது நன்கு தெரியும். ஒரு முறை அவர்களுடைய பொருளாதாரச் சுயநலத்தைத் தடுத்து விடுங்கள், பின்பு இந்தப் பெரிய ஜாதீய மாளிகை வீழ்ச்சியடைய நேரஞ்செல்லாது. கடவுள் என்பதுதான் என்ன? மனிதஜாதியின் குழந்தைப் பருவத்தினுடைய பயம் நிறைந்த இதயத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு உருவத்தின் மலர்ச்சி. மனிதர்கள் காட்டுமிராண்டி நிலையிலிருந்த காலத்தில், அதாவது அவர்களுடைய அறிவு வளர்ச்சி தற்கால ஐந்து வயதுக் குழந்தையினுடையதைப் போன்றிருந்த காலத்தில், அவர்கள் இருட்டு, தெரியாத இடம், அறிமுகமில்லாத பொருள் இவைகளைக் கண்டு பயமடைந்தார்கள்.

மின்னல், நெருப்பு போன்ற சக்தி வாய்ந்த பொருள்கள் அவர்களுக்கு மிகுந்த பயத்திற்குக் காரணமாயிருந்தன. அதிலிருந்து அவர்கள் தேவதைகளைக் கற்பனை செய்யத் துவங்கினார்கள். மெது மெதுவாக இறந்து போன வீரர்களும், பலசாலிகளும் இந்தத் தேவ கூட்டத்தில் இடம் பெற்றார்கள். ஒவ்வொரு ஜாதியிலும் இவ்விதம் அனேகத் தேவதைகளிருந்தன. அவைகளின் சக்தி, மேன்மை, பெருமை இவைகளுக்காக மனித ஜாதிகளுள் போட்டி இருந்து கொண்டேயிருந்தது. தங்கள் ஜாதித் தேவதைகளுக்குள்ளும் கூடச் சிறிது பெரிது என்ற தகராறு இருந்தது. பின்னால் “யார் பெரியவர், யார் பெரியவர்” என்று தேடியதன் பலனாய், ‘உலகத்தைத் தோற்றுவித்த’ ஒரே கடவுள் சிருஷ்டிக்கப்பட்டார்.

மனிதர்களின் மனோ வளர்ச்சியோடு கூடவே அவரிடத்திலும் அனேக நல்ல குணங்கள் சேர்க்கப்பட்டன. இவ்விதம்தான் கடவுளின் உற்பத்தி ஏற்பட்டது. உண்மையில் கடவுள் மனிதனுடைய மானசீக புத்திரன். கடவுளில்லா விட்டால் இந்த உலகத்தை யார் படைத்தார்களென்று நீங்கள் கேட்கலாம். ஒவ்வொரு பொருளுக்கும் படைப்பவர்கள் அவசியமா? அப்படி அவசியமானால் கடவுளைப் படைத்தவர்கள் யார்? அவர் தானே தோன்றினாரென்றால், இதே விஷயத்தை இயற்கை பற்றியும் ஏன் ஒப்புக் கொள்ளக் கூடாது?

பெண்களின் உண்மையான சுதந்திரம் பொது உடைமைக் கொள்கையில்தான் கிடைக்க முடியும். ஏனெனில் அதுதான் எல்லாச் சுதந்திரங்களுக்கும் பிறப்பிடமான, பொருளாதார சுதந்திரத்தைத் தோற்றுவிக்கிறது. அது சுதந்திரத்தின் விரோதியான மதம், கடவுள், சமூகம் எதையும் பொருட்படுத்துவ தில்லை. அது திருமணத்தைப் பெண்களின் வாழ்க்கைக்குரிய தொழிலாகச் செய்வதில்லை. அது பெண்கள் ஆண்களை விடக் குறைவான தகுதியுடையவர்களல்ல என்று கருதுகிறது. “உண்மையான இல்லாள்”, “உண்மையான தாய்”, “பெண்ணின் புனிதமான கடமை”, “கற்புக் கொள்கை”, என்பன போன்ற பெண்களுக்குக் கொடுமை செய்யும் சொற்களின் சுழலிலே அது அகப்பட்டுக் கொள்வதில்லை.

இதுவரை நாம் ராகுல்ஜியின் புத்தகத்தைப் பற்றிப் பார்த்தோம். அடுத்து நாம் பார்க்கப் போவது, உலகிலேயே, கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளரின் புத்தகத்தைப் பற்றி.
(தொடரும்)


 நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

என்னைக் கவர்ந்த புத்தகங்கள் 2 மூல ஆதாரமான மூலதனம்

இப்போதெல்லாம் ஆங்கில நாளிதழ் எதை எடுத்தாலும் ‘‘மார்க்ஸ், மார்க்ஸ்’’ என்று கூறுவதைப் பார்க்க முடிகிறது. கடந்த பத்து நாள்களில் மட்டும் (அக்டோபர். 2008) ‘இந்து’, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ மற்றும் பல நாளிதழ்களில் நான்கு முறை மார்க்ஸ் பற்றிய செய்திகளும், கட்டுரைகளும வெளியாகி உள்ளன.

‘‘மீண்டும் மார்க்ஸ் வந்து விட்டார்’’. ‘‘நெருக்கடி காலத்தில் மறுபடியும் மார்க்ஸ்’’ என்றெல்லாம் தலைப்புகள் பளிச்சிடுகின்றன.

‘‘மார்க்சின் ‘மூலதனம்’ புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்’’ என்று போப் சொல்கிறார். பிரான்சு நாட்டு ஜனாதிபதி சொல்கிறார். ஜெர்மனி நாட்டு நிதியமைச்சர் சொல்கிறார்.

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் தொடங்கிய கடுமையான பொருளாதார நெருக்கடி, இந்தியா உட்பட, உலகம் முழுவதும் பரவி வருகிறது. இது ‘‘மார்க்ஸ் சொன்னது சரிதான்’’ என்று அனைவரையும் சொல்ல வைத்திருக்கிறது.

ஆனால் நமது அருந்தமிழ் நாட்டின் பெருந்தலைவர்கள், தலைவிகள் யாரும், கம்யூனிஸ்டுகளைத் தவிர, இந்த நெருக்கடி குறித்தோ, காரணம் குறித்தோ, தீர்வு குறித்தோ வாய்திறப்பதே இல்லை.

இப்போது நாம் மூலதனம் புத்தகம் பற்றிப் பார்க்கலாம்.

எனக்குக் காரல் மார்க்சின் புத்தகங்கள் அறிமுகமானது எனது பதின் பருவத்தில். எனது பதினேழு வயதில் தோழர் ஐ.மா.பாவைக் கேள்விகளால் அரித்து கொண்டிருந்தேன்.

ஐ.மா.பா. என்ற ஐ.மாயாண்டி பாரதி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். அப்போது எங்களைப் போன்ற ‘சுள்ளான்’களையும் மதித்து விவாதிக்கக் கூடியவர்.

ஒருநாள் அவரைக் கேட்டேன்.

‘‘ஒரு முதலாளி முதல் போட்டு தொழிற்சாலைய நடத்துறான். முதல் போட்டவன் லாபம் சம்பாதிக்கிறதுல என்ன தப்பு?’’

அப்போது எங்களுடன் ஒரு ஆலைத் தொழிலாளியும் இருந்தார். அவரும் இளைஞர் தான். அவரைப் பார்த்து ஐ.மா.பா. ‘‘இவன் என்னமோ கேக்குறாண்டா, நீயே பதில் சொல்லு’’ என்றார்.

உடனே அந்தத் தொழிலாளி ‘‘போட்ட முதலத்தான் கொஞ்ச நாள்ல முதலாளி திருப்பி எடுத்துடுறான்ல. அதுக்கப்புறமும் லாபத்த எடுக்குறது எப்பிடிச் சரியாகும்?’’ என்றார்.

எனக்கு ‘திக்’ கென்றது.

dass இந்த விஷயம் எனக்கு ஏன் பிடிபடாமல் போனது என்று வெட்கமாக இருந்தது. இருந்தாலும் மீண்டும் கேள்வி கேட்டேன்.

‘‘அதுக்கப்புறமும் முதலாளி தொடர்ந்து நிர்வாகம் பண்றான்ல?

உடனே பதில் வந்தது.

‘‘அதுக்கு ஒரு சம்பளம் எடுத்துக்க. லாபத்தப் பூராவும் எடுத்துக்காத’’

பிறகு ஐ.மா.பா. நீண்ட விளக்கம் தந்தார். சில எளிய புத்தகங்களைப் படிக்கச் சொன்னார்.

படித்தேன். கொஞ்ச நாளில் மார்க்சின் புத்தகங்களையும் ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினேன்.

எனினும், மார்க்சின் தலைசிறந்த புத்தகமான ‘மூலதனம்’ புத்தகத்தைப் படிக்கப் பயமாக இருந்தது.

மூன்று காரணங்கள். ஒன்று : அப்போது அது தமிழில் இல்லை. ஆங்கிலத்தில் தான் இருந்தது. எனக்கோ அப்போது ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. இரண்டு : அந்தப் புத்தகத்தின் பெரிய்ய்.......ய அளவு. அதனுடைய நான்கு தொகுதிகளும் சேர்ந்து மொத்தம் 3,685 பக்கங்கள். மூன்று : அதன் விஷய கனம்.

எனவே பல ஆண்டுகளுக்குப் பிறகே அந்த ஆங்கிலப் பதிப்பைப் படித்து முடித்தேன்.

பிரம்மாண்டம்! உண்மையிலேயே பிரமித்துப் போனேன்!

உலகையே பிரமிக்க வைத்த, புதுமையான, புரட்சிகரமான, பொருளாதாரப் புத்தகம் என்பது முதல் காரணம். ஆனால் அது மட்டுமல்ல.

மார்க்சின் இலக்கிய நடை, கிண்டல், கேலி, தொழிலாளர் நிலை கண்டு குமுறும் கோப ஆவேசம், ‘‘இது, இது என்னுடைய கண்டுபிடிப்பு. இது என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல. பெயர் தெரியாத ஒரு பொருளாதாரவாதியின் கண்டுபிடிப்பு’’ என்று சொல்லும் நேர்மை, நமது சென்னை வரை நீண்டு வரும் அவரது ஆய்வின் வீச்சு...

யார் இந்த மார்க்ஸ்?

கம்யூனிசத்தின் தந்தை

மார்க்சுக்கு முன்பே கம்யூனிசம் என்ற சொல்லும், கருத்தும் இருந்து வந்தன. ஆனால் அறிவியல் அடிப்படையில் அமைந்த, புரட்சிகரவழிகாட்டக்கூடிய, நடைமுறைச் சாத்தியமான கம்யூனிசக் கருத்தியலுக்கு அவர்தான் தந்தை.

அதுமட்டுமல்ல.

தத்துவஞானி, பொருளாதார மேதை, அரசியல் அறிஞர், சமூகவியல் வல்லுநர், வரலாற்று ஆசிரியர், அறிவியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், பத்திரிகையாளர், அமைப்பாளர்.... அனைத்துக்கும் மேலாக,

மகத்தானபுரட்சிக்காரர்!

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் உலகிலேயே தலைசிறந்த சிந்தனையாளர் என்று பி.பி.சி. நிறுவனக் கருத்துக் கணிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஜெர்மனியில் பிறந்து, உலக மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து, வறுமைவாட்டிய போராட்ட வாழ்க்கையின் கொடூரமான துன்பங்கள் அனைத்தையும் ஏற்று...

ம்ம்ம்.... அவரது வாழ்க்கை வரலாற்றை நீங்கள் படித்து விடுங்கள். அவரும், அவரது மனைவி ஜென்னியும், குழந்தைகளும், உயிர்த்தோழர் எங்கெல்சும் வாழ்ந்த அன்பு வாழ்க்கையை, தியாக வாழ்க்கையை, போராட்ட வாழ்க்கையை நீங்கள் படித்தால் உங்கள் உடல் சிலிர்க்கும்! உள்ளம் உருகும்!

இப்போது நாம் மூலதனம் புத்தகம் பற்றிப் பார்க்கலாம்.

‘மூலதனம்’ புத்தகத்தைச் சிலர் ‘டாஸ் கேப்பிட்டல்’ என்று சொல்வதை நீங்கள் கேட்டு இருக்கலாம். அது ஜெர்மன் மொழிச் சொல். மார்க்ஸ் இந்தப் புத்தகத்தை ஜெர்மன் மொழியில் தான் எழுதினார்.

‘Das Kapital’ என்ற ஜெர்மன் தலைப்பை ஆங்கிலத்தில் ‘The Capital’ என்று மொழி பெயர்க்கலாம். எனினும் ஆங்கிலத்தில் ‘சிணீஜீவீtணீறீ’ என்றே மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. தமிழில் ‘மூலதனம்’ அல்லது ‘முதல்’.

இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன என்பதை அதன் முன்னுரையில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார் ‘‘நவீன சமுதாய இயக்கத்தின் பொருளாதார விதியை வெளிப்படுத்துவதே இந்தப் புத்தகத்தின் உச்ச நோக்கம்’’ என்கிறார்.



எனினும் மனித சமுதாய வரலாறு முழுவதையுமே ஆய்வு செய்கிறார். வரலாறு என்பது, முன்காலத்து கம்யூனிசச் சமுதாயம் நீங்கலாக, வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. இதன் மூல ஆதாரம் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்பில் உள்ளது. எனவே இன்றைய சமுதாயத்தை மாற்றியமைக்க, அதன் பொருளாதாரத்தை ஆழமாக ஆய்வு செய்கிறார் மார்க்ஸ்.

முதலாளித்துவச் சமுதாயத்தில் செல்வம் என்பது, சரக்குகளின் அல்லது பண்டங்களின் (commodity) திரட்சியாக, மொத்தமாக உள்ளது. எனவே மார்க்ஸ் தனது ஆய்வை, சரக்கு என்றால் என்ன என்பதிலிருந்து தொடங்குகிறார்.

சரக்கு என்றால் என்ன?

(இன்னும் படிக்கலாம்)